கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Tuesday, September 19, 2006

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

முழுமுதற் கடவுளாம் விநாயகரைத் தொழுதே எல்லா செயல்களும் தொடங்கப்படுகின்றன. எல்லாப் பிரிவினராலும் வணங்கப் படுபவர் விநாயகர். பிள்ளையார் என்று பிரியமுடன் அழைக்கப் படும் அந்த ஐந்து கரத்தை உடையவரை, யானைமுகம் கொண்டவரை, சந்திரனின் பிறைபோன்ற தந்தம் கொண்டவரை, ஞான வடிவானவரை நாம் சிந்தையில் வைத்து போற்றுவோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home