கந்தர் அனுபூதி - 2
காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்
இதை கொஞ்சம் எளிமையாகப் பார்த்தால் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக, தஞ்சத் தருள் சண்முகனுக்கு, இயல் சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திட பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் என்று கொள்ளலாம்.
தனது அனுபூதியை காப்புச் செய்யுளுடன் தொடங்கும் அருணகிரியார் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்குகிறார். தன்னிடத்தில் அடைக்கலம் என்று வந்தவர்களை காக்கும் கடவுளாம் சண்முகப் பெருமானுக்கு, சம்சார பந்தம் என்னும் சூழலில் தத்தளித்து கல் போன்ற நெஞ்சத்தை உடையவர்களையும் நெகிழ்ந்து உருகச் செய்ய வல்ல தமிழ் இலக்கணம் வழுவாது மாலைகளால் ஆன செய்யுளை படைக்க வேண்டும் என்றும், அதற்கு அந்த ஆனைமுகன் அருள் வேண்டும் என்றும் வணங்குகிறார்.
திருப்புகழிலும் சரி மற்ற பாடல்களிலும் சரி ஆனைமுகனை அருணகிரியார் பெரிதும் போற்றுவதைக் காணலாம். விநாயகப் பெருமானை வணங்கி ஒரு செயலைத் தொடங்கி விட்டால் அதற்குப் பிறகு எல்லாமே வெற்றிதானே
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home