கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Wednesday, September 27, 2006

கந்தர் அனுபூதி - 1

முருகனின் புகழ் பாடும் பல நூல்களில் கந்தர் அனுபூதி முக்கியமான ஒன்று. அதை அளித்த அருணகிரியாரின் வரலாறு நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். சுருக்கமாக கூறின், முருகனால் ஆட்கொள்ளப் பட்டு திருப்புகழ் என்ற காவியத்தை முருகன் தலங்கள்தோறும் சென்று பாடியருளினார் அருணகிரியார். அவர் மீது உள்ள பொறாமையால் சம்பந்தாண்டான் என்னும் காளி உபாசகர் அவருக்கு பல துன்பங்களைக் கொடுத்தான். முருகன் அருளால் அத்தனையையும் அவர் வென்றார். இந்த நிலையில் அரசனுக்கு கண் பார்வை போயிற்று. சம்பந்தாண்டான் அரசனிடம், தேவ லோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொண்டுவந்தால் பார்வை திரும்பவும் கிடைக்கும் என்று தெரிவித்தான். அரசன் வேண்டுகோளின் படி அருணகிரியார் தேவ லோகம் சென்று பாரிஜாத மலர் எடுத்து வர இசைந்தார். ஆனால் மனித உடம்போடு செல்ல முடியாத தால் ஒரு கிளியின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து தேவலோகம் சென்று அந்த மலரை எடுத்து வந்தார். இதற்குள் சம்பந்தாண்டானும் அவனுடைய ஆட்களும் அவருடைய உடம்பைக் கண்டுபிடித்து அழித்து விட்டனர். மலரைக் கொண்டுவந்து அரசனுக்கு பார்வை வந்தாலும், தன் பழைய உடலுக்குச் செல்ல முடியாத அருணகிரியார், கிளி உருவாக திருவண்ணாமலை கோபுரத்தில் அமர்ந்து முருகனைப் பாடி இயற்றிய 51 பாடல்களே கந்தர் அனுபூதி. திருவண்ணாமலையில் அந்த கோபுரம் 'கிளிக் கோபுரம்' என்று அழைக்கப் படுகிறது.

இனி இந்த அனுபூதியில் வரும் பாடல்களைப் பார்ப்போம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home